Wednesday, 17 April 2013



மேலை நாடுகளுக்குச் சென்று படிக்காத, 
நம் நாட்டிலேயே படித்த ஒருவரை 
மேலை நாடுகள் பலவும் கவர்ந்து இழுத்தன.

 "எங்கள் நாட்டுக்கு வாருங்கள்; எங்கள் மாணவர்களுக்குக் கற்பியுங்கள்' என்று அந்நாடுகள் வேண்டிக் கேட்டுக் கொண்டன. அந்நிய மோகம் இன்று தலை விரித்தாடும் இந்திய மண்ணில், அன்று தோன்றிய ஒருவரை, அந்நியர்கள் மோகங்கொண்டு அழைத்தனர்.இந்திய மோகம் அன்று அந்நிய மண்ணில் வித்து ஊன்றக் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? 
வியப்பாக இருக்கிறதல்லவா?
ஆம.அவர்தான்"தத்துவமேதை சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்' 



ஊர் பெயரை உய்வித்தவர்!
**************************

கோபம் தணிந்தால் ஒரு மனிதனுக்கு அறிவும், அடக்கமும் செல்வங்களாக வந்து சேரும் என்பர். சென்னையிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருத்தணி.
இப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் பலவற்றில்,
"சர்வப்பள்ளி' என்ற கிராமமும் ஒன்று.
இந்தக் கிராமத்தில் தான் ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதியன்று பிறந்தார். 
சில்தாராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வீராசுவாமிதான் இவரது தகப்பனார் . சர்வப்பள்ளியில் பிறந்த ராதாகிருஷ்ணன் தன் வாழ்நாள் முழுவதும் தனது ஊரின் பெயரையே உலகுக்குத் தெரியப்படுத்தும் வண்ணம், "சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்' என்றே அறிமுகம் ஆனார்.

மகாத்மா காந்தியின் கண்ணன்!
*******************************

இவரது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று. 
அரசியலில் பொறுமை; சகிப்புத் தன்மை; நிதானம் ஆகிய பண்புகளைக் கடைப்பிடித்து, எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மகாத்மா காந்தியடிகள். 
இதன் காரணமாக பலநாட்டுத் தலைவர்கள் காந்தியடிகளைத் தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டதும் உண்டு. அப்படி உலகமே போற்றிய மகாத்மா அவர்கள், ஒருமுறை ராதாகிருஷ்ணனிடம் உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன் ஒரு பேராசிரியராக இருந்தார்.


ராதாகிருஷ்ணனின் புலமை, தத்துவஞானம், எதனையும் புரிந்து கொண்டு விளக்கும் சொல்லாற்றல் ஆகியவற்றைக் கண்டு மகாத்மா வியந்து போனார்.

""மகாபாரதத்தில், கண்ணன் வந்து வீர அர்ச்சுனனுக்குப் பாடம் போதித்ததை நாம் அறிவோம். சகல வித்தைகளும் கற்றுத் தேறிய அர்ச்சுனன், கண்ணனிடம் பலவகைக் கேள்விகள் கேட்டு தனது ஞானத்தை விருத்தி செய்து கொள்கிறான். மகாத்மா காந்தியடிகளோ, ராதாகிருஷ்ணனைப் பார்த்து, 
"அன்புடையீர்! நீங்கள் எனக்குக் கண்ணன் மாதிரி... நான் உங்களிடம் அர்ச்சுனனாகப் பாடம் கேட்க விரும்பு கிற÷ன்' என்று கூறினாராம்.

மகாத்மா காந்தி அவர்களே கண்ணன் என்று சிறப்பித்துப் பாராட்டிய தத்துவமேதை ராதாகிருஷ்ணன் இத்தனைக்கும், காந்திஜியை விட பதினேழு வயது இளையவர். வியப்பாக இருக்கிறதல்லவா? 
விஷய ஞானங்களைக் கற்றுக் கொள்வதிலும், அவற்றில் தேர்ச்சி பெறுவதிலும் வயது என்பது தடையல்ல. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறையும், கற்றுத் தேர்வதில் ஈடுபாடும் அக்கறையும்தான் மிக முக்கியமாகும். இத்தகைய உணர்வு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மாணவப் பருவத்திலேயே இருந்தது. இதுதான் அவரை புகழின் உச்சிக்குப் கொண்டு சென்றது.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்!

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தர்க்க இயல் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, அவ்வப்போது பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார் ராதாகிருஷ்ணன். அவர் எழுதிய கட்டுரைகள் பலரைப் படிக்கவும், சிந்திக்கவும் தூண்டின. அறிஞர்கள் பலர் அவரின் அறிவாற்றலைப் புகழ்ந்தனர். 

புகழ்பரப்பி நின்ற ராதாகிருஷ்ணன் தானாக, எந்தப் பதவியையும் தேடிப் போகவில்லை. மாறாக அவரைத் தேடிப் பதவிகள் அணிவகுத்து வந்தன. இப்படித்தான் கல்கத்தா பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவி இவரைத் தேடிவந்தது.

ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களும், அவர் வெளிநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும், அவரது ஆற்றலையும், இந்திய நாட்டின் பெருமைகளையும், வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.

குறிப்பாக, இங்கிலாந்து, 1935-ம் ஆண்டு, "பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் பல்கலைக் கழகங்கள் மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்டியது. கல்வியின்அவசியம் குறித்தும், அதனைப் போதிக்கும் முறைகள் பற்றியும் ராதாகிருஷ்ணனன் ஆற்றிய உரை, மாநாட்டுக்கு வந்திருந்தோர் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்திக்கத் தூண்டியது.

ஒருமுறை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகம்,"அனைத்துலக தத்துவ மாநாடு'ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. உலகின் பிரபல அறிஞர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்த அவர் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடர்ந்துமேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு அமைந்த இப்பயணங்களின் போதும், வெளிநாட்டில் தங்கியிருந்த போதும் ராதாகிருஷ்ணன் தன்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியப் பண்பாட்டை மறந்ததும் இல்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ராதாகிருஷ்ணன் அவர்களை அழைத்து பேராசிரியர் பதவியைத் தந்தது.

மேலை நாடு சென்று படிக்காத ராதாகிருஷ்ணன் மேலை நாட்டு மாணவர் களுக்கு பேராசிரியரானார். இது அவரதுஆங்கிலப் புலமைக்குச் சான்று எனலாம். இங்கிலாந்திலும், கல்கத்தாவிலும் பேராசிரியராகவும், ஆந்திராவில் துணை வேந்தராகவும் ஒரே சமயத்தில் பணியாற்றி நமது நாட்டுக்குப் பெருமை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

பிரிட்டிஷ் அகடமி அவருக்கு,"பெலோஷிப்' என்ற விருது அளித்துக் கவுரவித்தது.

குடியரசுத் தலைவர்!
1952-ல் குடியரசுத் துணைத் தலைவரானார். பத்தாண்டுக்களுக்குப்பின் 1962-ம்இந்தியாவின் குடியரசுத் தலைவரானார்.இந்தியாவின் மிக உயர்ந்த விருதான,"பாரத ரத்னா' விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 இந்திய நாட்டில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது..!!

'தத்துவமேதை' டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவுதினம் இன்று...

நன்றி; http://www.eegarai.net/t88838-topic
வழி-கவியரசு
மேலை நாடுகளுக்குச் சென்று படிக்காத,
நம் நாட்டிலேயே படித்த ஒருவரை
மேலை நாடுகள் பலவும் கவர்ந்து இழுத்தன.

"எங்கள் நாட்டுக்கு வாருங்கள்; எங்கள் மாணவர்களுக்குக்கற்பியுங்கள்' என்று அந்நாடுகள் வேண்டிக் கேட்டுக் கொண்டன. அந்நிய மோகம் இன்று தலை விரித்தாடும் இந்திய மண்ணில், அன்று தோன்றிய ஒருவரை, அந்நியர்கள் மோகங்கொண்டு அழைத்தனர்.இந்திய மோகம் அன்று அந்நிய மண்ணில் வித்து ஊன்றக் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா?
வியப்பாக இருக்கிறதல்லவா?
ஆம.அவர்தான்"தத்துவமேதை சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்'



ஊர் பெயரை உய்வித்தவர்!
**************************

கோபம் தணிந்தால் ஒரு மனிதனுக்கு அறிவும், அடக்கமும் செல்வங்களாக வந்து சேரும் என்பர். சென்னையிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருத்தணி.
இப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் பலவற்றில்,
"சர்வப்பள்ளி' என்ற கிராமமும் ஒன்று.
இந்தக் கிராமத்தில் தான் ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதியன்று பிறந்தார்.
சில்தாராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வீராசுவாமிதான் இவரது தகப்பனார் . சர்வப்பள்ளியில் பிறந்த ராதாகிருஷ்ணன் தன் வாழ்நாள் முழுவதும் தனது ஊரின் பெயரையே உலகுக்குத் தெரியப்படுத்தும் வண்ணம், "சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்' என்றே அறிமுகம் ஆனார்.

மகாத்மா காந்தியின் கண்ணன்!
*******************************

இவரது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று.
அரசியலில் பொறுமை; சகிப்புத் தன்மை; நிதானம் ஆகிய பண்புகளைக் கடைப்பிடித்து, எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மகாத்மா காந்தியடிகள்.
இதன் காரணமாக பலநாட்டுத் தலைவர்கள் காந்தியடிகளைத் தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டதும் உண்டு. அப்படி உலகமே போற்றிய மகாத்மா அவர்கள், ஒருமுறை ராதாகிருஷ்ணனிடம் உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன் ஒரு பேராசிரியராக இருந்தார்.


ராதாகிருஷ்ணனின் புலமை, தத்துவஞானம், எதனையும் புரிந்து கொண்டு விளக்கும் சொல்லாற்றல் ஆகியவற்றைக் கண்டு மகாத்மா வியந்து போனார்.

""மகாபாரதத்தில், கண்ணன் வந்து வீர அர்ச்சுனனுக்குப் பாடம் போதித்ததை நாம் அறிவோம். சகல வித்தைகளும் கற்றுத் தேறிய அர்ச்சுனன், கண்ணனிடம் பலவகைக் கேள்விகள் கேட்டு தனது ஞானத்தை விருத்தி செய்து கொள்கிறான். மகாத்மா காந்தியடிகளோ, ராதாகிருஷ்ணனைப் பார்த்து,
"அன்புடையீர்! நீங்கள் எனக்குக் கண்ணன் மாதிரி... நான் உங்களிடம் அர்ச்சுனனாகப் பாடம் கேட்க விரும்பு கிற÷ன்' என்று கூறினாராம்.

மகாத்மா காந்தி அவர்களே கண்ணன் என்று சிறப்பித்துப் பாராட்டிய தத்துவமேதை ராதாகிருஷ்ணன் இத்தனைக்கும், காந்திஜியை விட பதினேழு வயது இளையவர். வியப்பாக இருக்கிறதல்லவா?
விஷய ஞானங்களைக் கற்றுக் கொள்வதிலும், அவற்றில் தேர்ச்சி பெறுவதிலும் வயது என்பது தடையல்ல. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறையும், கற்றுத் தேர்வதில் ஈடுபாடும் அக்கறையும்தான் மிக முக்கியமாகும். இத்தகைய உணர்வு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மாணவப் பருவத்திலேயே இருந்தது. இதுதான் அவரை புகழின் உச்சிக்குப் கொண்டு சென்றது.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்!

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தர்க்க இயல் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, அவ்வப்போது பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார் ராதாகிருஷ்ணன். அவர் எழுதிய கட்டுரைகள் பலரைப் படிக்கவும், சிந்திக்கவும் தூண்டின. அறிஞர்கள் பலர் அவரின் அறிவாற்றலைப் புகழ்ந்தனர்.

புகழ்பரப்பி நின்ற ராதாகிருஷ்ணன் தானாக, எந்தப் பதவியையும் தேடிப் போகவில்லை. மாறாக அவரைத் தேடிப் பதவிகள் அணிவகுத்து வந்தன. இப்படித்தான் கல்கத்தா பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவி இவரைத் தேடிவந்தது.

ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களும், அவர் வெளிநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும், அவரது ஆற்றலையும், இந்திய நாட்டின் பெருமைகளையும், வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.

குறிப்பாக, இங்கிலாந்து, 1935-ம் ஆண்டு, "பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் பல்கலைக் கழகங்கள் மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்டியது. கல்வியின்அவசியம் குறித்தும், அதனைப் போதிக்கும் முறைகள் பற்றியும் ராதாகிருஷ்ணனன் ஆற்றிய உரை, மாநாட்டுக்கு வந்திருந்தோர் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்திக்கத் தூண்டியது.

ஒருமுறை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகம்,"அனைத்துலக தத்துவ மாநாடு'ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. உலகின் பிரபல அறிஞர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்த அவர் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடர்ந்துமேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு அமைந்த இப்பயணங்களின் போதும், வெளிநாட்டில் தங்கியிருந்த போதும் ராதாகிருஷ்ணன் தன்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியப் பண்பாட்டை மறந்ததும் இல்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ராதாகிருஷ்ணன் அவர்களை அழைத்து பேராசிரியர் பதவியைத் தந்தது.

மேலை நாடு சென்று படிக்காத ராதாகிருஷ்ணன் மேலை நாட்டு மாணவர் களுக்கு பேராசிரியரானார். இது அவரதுஆங்கிலப் புலமைக்குச் சான்று எனலாம். இங்கிலாந்திலும், கல்கத்தாவிலும் பேராசிரியராகவும், ஆந்திராவில் துணை வேந்தராகவும் ஒரே சமயத்தில் பணியாற்றி நமது நாட்டுக்குப் பெருமை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

பிரிட்டிஷ் அகடமி அவருக்கு,"பெலோஷிப்' என்ற விருது அளித்துக் கவுரவித்தது.

குடியரசுத் தலைவர்!
1952-ல் குடியரசுத் துணைத் தலைவரானார். பத்தாண்டுக்களுக்குப்பின் 1962-ம்இந்தியாவின் குடியரசுத் தலைவரானார்.இந்தியாவின் மிக உயர்ந்த விருதான,"பாரத ரத்னா' விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 இந்திய நாட்டில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது..!!

'தத்துவமேதை' டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவுதினம் இன்று...

No comments:

Post a Comment