செல்போன் அழைப்பை வீணாக்காமல் தவிர்க்க..
பொதுவாக தண்ணீரை செலவு செய்வது போல பலரும் செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம். இப்போதெல்லாம் தண்ணீரும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டதால், தண்ணீரை விட அதிகமாக செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம்.
செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம் என்றால் என்னவென்று புரியவில்லை. அதாவது, ஒரு தொலைபேசியிலோ அல்லது செல்போனிலோ ஒருவரை அழைத்துவிட்டு, எதையும் சொல்லாமல் வீணாக்குவதாகும்.
அதாவது, அவர் இல்லையா.. அப்புறம் பேசுகிறேன்.. பேச வந்ததை மறந்து விட்டேனே… மாற்றி உங்களுக்கு போன் செய்து விட்டேனா என்பது போன்ற வாக்கியங்களோடு எத்தனையோ செல்போன் அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் தவிர்க்க..
பேசுவதற்கென்று சில பண்பான முறைகள் இருக்கின்றன. வழக்கமாகப் பேசுகிறவர்களாக இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது. புதியவர்களாக இருந்தால் அழைத்தவர் தன்னுடைய பெயர், ஊர், தொழில் ஆகியவற்றைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்ட பிறகு, தான் தொடர்பு கொள்ள விரும்புகிறவர் பெயர், ஊர், தொழில் போன்றவற்றைச் சொல்லி விசாரிப்பதே பண்பாடு.
மிகவும் அந்தரங்கமான விஷயமாக இல்லாமல் அலுவலக வேலை தொடர்பானது என்றால், இன்ன விஷயத்துக்காகத் தொடர்பு கொண்டேன் என்று கோடிட்டு காட்டிவிட்டால் செல்போன் அழைப்பை ஏற்கும் குடும்பத்தார் அதைத் தங்களுடைய குடும்பத் தலைவருக்குச் சொல்லி உரிய நேரத்தில் கவனிக்கப்பட உதவிகரமாக இருக்கும். “அவர் இல்லையா, சரி அப்புறம் பேசிக்கொள்கிறேன்’ என்றால் அழைப்பு வீணாகிவிடும்.
செல்போனை இனி கையில் எடுக்கும்போதே என்ன பேச வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொள்வது நல்லது.
அலுவலகத்தாருடன் பேசுவதாக இருந்தாலும் கடைகளில் அல்லது சேவை அமைப்புகளிடம் சேவையைப் பெற விரும்பினாலும் முதலில் நமக்குத் தேவைப்படும் விடைகளுக்கு ஏற்ப வரிசையாகக் கேள்விகளைக் குறித்துக் கொண்டு பேசுவதும் நல்ல பலனைத் தரும். இதை மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று நினைக்கக்கூடாது.
செல்போனைத் தொடர்ந்து நெடுநேரம் கன்னத்தோடு வைத்துக்கொண்டு பேசினால் அந்தப் பகுதியில் புற்றுநோய் வரும் என்கிறார்கள். அத்துடன் அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தால் கண்களும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.
செல்போனை எந்த நேரமும் வைத்திருப்பதும், செல்போனில் எப்போதும் வீண் அரட்டை அடிப்பதும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. அதில் இருந்து 24 மணி நேரமும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக செல்போனில் பேசும் போது, அந்த கதிர்வீச்சு அதிகப்படியாக உடலை பாதிக்கிறது.
செல்போனைக் கூடியவரை குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தாமலே இருப்பது என்ற முடிவை இப்போது எடுப்போம், அதைச் செயல்படுத்துவோம். சுருக்கமாகச் சொன்
பொதுவாக தண்ணீரை செலவு செய்வது போல பலரும் செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம். இப்போதெல்லாம் தண்ணீரும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டதால், தண்ணீரை விட அதிகமாக செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம்.
செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம் என்றால் என்னவென்று புரியவில்லை. அதாவது, ஒரு தொலைபேசியிலோ அல்லது செல்போனிலோ ஒருவரை அழைத்துவிட்டு, எதையும் சொல்லாமல் வீணாக்குவதாகும்.
அதாவது, அவர் இல்லையா.. அப்புறம் பேசுகிறேன்.. பேச வந்ததை மறந்து விட்டேனே… மாற்றி உங்களுக்கு போன் செய்து விட்டேனா என்பது போன்ற வாக்கியங்களோடு எத்தனையோ செல்போன் அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் தவிர்க்க..
பேசுவதற்கென்று சில பண்பான முறைகள் இருக்கின்றன. வழக்கமாகப் பேசுகிறவர்களாக இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது. புதியவர்களாக இருந்தால் அழைத்தவர் தன்னுடைய பெயர், ஊர், தொழில் ஆகியவற்றைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்ட பிறகு, தான் தொடர்பு கொள்ள விரும்புகிறவர் பெயர், ஊர், தொழில் போன்றவற்றைச் சொல்லி விசாரிப்பதே பண்பாடு.
மிகவும் அந்தரங்கமான விஷயமாக இல்லாமல் அலுவலக வேலை தொடர்பானது என்றால், இன்ன விஷயத்துக்காகத் தொடர்பு கொண்டேன் என்று கோடிட்டு காட்டிவிட்டால் செல்போன் அழைப்பை ஏற்கும் குடும்பத்தார் அதைத் தங்களுடைய குடும்பத் தலைவருக்குச் சொல்லி உரிய நேரத்தில் கவனிக்கப்பட உதவிகரமாக இருக்கும். “அவர் இல்லையா, சரி அப்புறம் பேசிக்கொள்கிறேன்’ என்றால் அழைப்பு வீணாகிவிடும்.
செல்போனை இனி கையில் எடுக்கும்போதே என்ன பேச வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொள்வது நல்லது.
அலுவலகத்தாருடன் பேசுவதாக இருந்தாலும் கடைகளில் அல்லது சேவை அமைப்புகளிடம் சேவையைப் பெற விரும்பினாலும் முதலில் நமக்குத் தேவைப்படும் விடைகளுக்கு ஏற்ப வரிசையாகக் கேள்விகளைக் குறித்துக் கொண்டு பேசுவதும் நல்ல பலனைத் தரும். இதை மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று நினைக்கக்கூடாது.
செல்போனைத் தொடர்ந்து நெடுநேரம் கன்னத்தோடு வைத்துக்கொண்டு பேசினால் அந்தப் பகுதியில் புற்றுநோய் வரும் என்கிறார்கள். அத்துடன் அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தால் கண்களும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.
செல்போனை எந்த நேரமும் வைத்திருப்பதும், செல்போனில் எப்போதும் வீண் அரட்டை அடிப்பதும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. அதில் இருந்து 24 மணி நேரமும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக செல்போனில் பேசும் போது, அந்த கதிர்வீச்சு அதிகப்படியாக உடலை பாதிக்கிறது.
செல்போனைக் கூடியவரை குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தாமலே இருப்பது என்ற முடிவை இப்போது எடுப்போம், அதைச் செயல்படுத்துவோம். சுருக்கமாகச் சொன்

No comments:
Post a Comment