வரலாற்றில் இன்று.அக்டோபர். 7
சோவியத் யூனியன் அனுப்பிய லூனா 3, நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம் இன்று (1959).
லூனா 3 (Luna 3 அல்லது E-2A தொடர்) நிலாவை நோக்கி ஏவப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் மூன்றாவது விண்கலமாகும். இதற்கு முன்னர் பார்த்திடாத நிலவின் பகுதிகளைப் புகைப்படமெடுத்தது இவ்விண்கலம். இவ்விண்கலத்தின் வடிவம் நீள்வட்ட வடிவமாகும். 130 செ.மீ நீளமும் 120 செ.மீ விட்டமும் உடையது. இவ்விண்கலம் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தியதி ஏவப்பட்டது. இதன் எடை 278.5 கிலோகிராம் ஆகும். அக்டோபர் 6, 1959 அன்று நிலவுக்கு மிக அண்மையில் 6.200 கிலோமீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் எடுத்தது. நிலவின் மறுபுறத்தில் வடக்குத் தெற்காகப் புகைப்படமெடுத்து பூமிக்குத் திரும்பும் போது இதன் வட்டப்பாதை நிலவின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டது.
அக்டோபர் 7, 1959 அன்று 40 நிமிடங்களில் 29 புகைப்படங்களை இவ்விண்கலம் எடுத்தது.

No comments:
Post a Comment