நான் முதல்வன் - உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் உரை
விருதுநகர் மாவட்டத்தில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி இன்று(21.10.2024) விருதுநகர் கே.வி.எஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் பாலையம்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவத்தின் முதல்வர் சிறப்புரை ஆற்றினார்.
உதவித்திட்ட அலுவலர் மீண்டும் விருதுநகர் மாவட்டம் பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்க வேண்டும் என ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.
விரிவுரையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை விளக்கினர்.
மாணவர்களின் இடைநிற்றல், உயர்கல்வி, நான் முதல்வன் போர்டல் விழிப்புணர்வு, மீண்டும் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற வெண்டும் என்ற தலைப்பில் முதன்மைக்கல்வி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:
Post a Comment