பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு!
பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தஙகள், சேர்க்கை மற்றும் நீக்கல் இருப்பின் அதை ஜனவரி 2 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்பட்டியலைத் தேர்வு எண்ணுடன் தேர்வுத்துறை டிசம்பர் 24 ஆம் தேதி வெளியிட்டது. இதில் மாற்றஙகள் இருப்பின் மாற்றம் செய்யவும், இடையில் மாற்றுச் சான்றிதழ் பெற்றிருந்தால் பெயரை நீக்கவும், புதியதாக மாணவர் சேர்ந்தால் சேர்க்கவும் பள்ளிகளுக்கு ஜனவரி 2 ஆம் தேதி வரை வாய்ப்பினை வழஙகியுள்ளதாகத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment